×

ஊழியருக்கு கொரோனா: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு பரிசோதனை!

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு சோதனை செய்யப்படவுள்ளது. முதல்வர் உட்பட அவரது வீடு,அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 85 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால்
 

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு சோதனை செய்யப்படவுள்ளது. முதல்வர் உட்பட அவரது வீடு,அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 85 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது.