×

‘மலைபோல் 8 பிள்ளைகள்’ ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் 94 வயது மூதாட்டி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மீஞ்சூரை சேர்ந்தவர் மூதாட்டி அலமேலு. இவருக்கு 94 வயதாகிறது. இவருக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள் என 8 பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் மகாதேவன் உயிரிழந்த நிலையில் தனது வீடு மற்றும் தனது கணவர் கட்டி விட்டு சென்ற கடை உள்ளிட்டவற்றை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து இந்த மூதாட்டி தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். ஆனால் வீடு மற்றும் குடோனை வாடகைக்கு விட கூடாது
 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மீஞ்சூரை சேர்ந்தவர் மூதாட்டி அலமேலு. இவருக்கு 94 வயதாகிறது. இவருக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள் என 8 பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் மகாதேவன் உயிரிழந்த நிலையில் தனது வீடு மற்றும் தனது கணவர் கட்டி விட்டு சென்ற கடை உள்ளிட்டவற்றை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து இந்த மூதாட்டி தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

ஆனால் வீடு மற்றும் குடோனை வாடகைக்கு விட கூடாது என அவரது மூத்த மகன் ஏழுமலை பிரச்சனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் போதிய வருமானம் இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் அலமேலு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்த நிலையில் அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் வயதான காலத்தில் தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டுமென பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற மூதாட்டி அலமேலு கோட்டாட்சியர் செல்வத்திடம் மனு அளித்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் செல்வம் உறுதி அளித்ததாக தெரிகிறது. 8 பிள்ளைகளை பெற்று ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் மூதாட்டி அலமேலு கஷ்டப்படுவது அப்பகுதி மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது