×

பிரணாப் முகர்ஜி மறைவு- அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி தமிழகத்தில் 7நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது. இதில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள ராட்சத கொடிக்கம்பத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி தமிழகத்தில் 7நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது. இதில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள ராட்சத கொடிக்கம்பத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.