×

“வீட்டுக்குள் கிடந்த தாய்,மகள் சடலங்கள்” கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தில் வந்தவர் ராணி (65). இவரது மகளின் பெயர் ல் ராஜேஸ்வரி. அவருக்கு அதே ஊரிலேயே திருமணம் ஆகிய நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறாராம். அதனால் தனது தாயாருடன் சேர்ந்து ராஜேஸ்வரியும், அம்மா வீட்டிலேயே தங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டுக்குள் இரண்டு பேரின் சடலம் கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே, பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு
 

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தில் வந்தவர் ராணி (65). இவரது மகளின் பெயர் ல் ராஜேஸ்வரி. அவருக்கு அதே ஊரிலேயே திருமணம் ஆகிய நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறாராம். அதனால் தனது தாயாருடன் சேர்ந்து ராஜேஸ்வரியும், அம்மா வீட்டிலேயே தங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டுக்குள் இரண்டு பேரின் சடலம் கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே, பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே அங்கு வந்த போலீசார் அவர்களது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதனால் அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள்? அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.