×

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பியதுடன், உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என
 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில், இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பியதுடன், உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.