×

ஒ.பன்னீர் செல்வத்தின் மனைவி மரணம் : தலைவர்கள் இரங்கல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் . இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு. வெங்கடேசன், “சக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் அவர்களின் தாயாரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியுமான விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தியுள்ளார்.
 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் .

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு. வெங்கடேசன், “சக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் அவர்களின் தாயாரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியுமான விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, “தமிழக முன்னாள் முதலமைச்சரும்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார் .

எம்.பி. ஜோதிமணி, “அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவியும்,நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரவீந்திரநாத்குமார் அவர்கள் தாயாருமான விஜயலட்சுமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.