தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 9% அதிகம்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் இன்றுவரை தமிழகத்தில் 39.6 சென்டிமீட்டர் மழை அளவுக்கு பதில் 43.1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக 102.9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை
Dec 9, 2020, 14:04 IST
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகம் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் இன்றுவரை தமிழகத்தில் 39.6 சென்டிமீட்டர் மழை அளவுக்கு பதில் 43.1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக 102.9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.