×

மதுரையில் நாளை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு-ஆட்சியர் அறிவிப்பு!

மதுரையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,077ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,803 ஆக உள்ள நிலையில் 4,163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுரையில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 24ஆம் தேதி வரை அமலில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வுகளுடன் வழக்கமான ஊரடங்கு நடைமுறை மதுரையில்
 

மதுரையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,077ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,803 ஆக உள்ள நிலையில் 4,163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுரையில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 24ஆம் தேதி வரை அமலில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வுகளுடன் வழக்கமான ஊரடங்கு நடைமுறை மதுரையில் நாளை முதல் பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் இத்தகைய முடிவை அறிவித்துள்ளது.