×

புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டது!

புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து இரவு நேர ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் இரவு ஊரடங்கு அமலில் இருந்தது. மேலும் கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி அத்தியாவசிய கடைகள், மதுபான கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8
 

புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து இரவு நேர ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் இரவு ஊரடங்கு அமலில் இருந்தது. மேலும் கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி அத்தியாவசிய கடைகள், மதுபான கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரவு நேரங்களில் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடையும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. மேலும் மதுபானக்கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள் வழக்கம்போல் அரசு அனுமதித்த நேரத்தில் இயங்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.