×

தமிழகத்தில் புதிய தளர்வுகள் : முதல்வர் இன்று அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளை இன்று முதல்வர் பழனிசாமி அறிவிக்கிறார். கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த 7 மாதமாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும் கொரோனா பாதிப்பு குறைய குறைய ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொது போக்குவரத்து, கடைகள், கோயம்பேடு சந்தை, ஓட்டல்கள், தியேட்டர்கள் திறப்பு என அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் பள்ளி – கல்லூரிகள் திறப்பு, மெரினா
 

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளை இன்று முதல்வர் பழனிசாமி அறிவிக்கிறார்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த 7 மாதமாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும் கொரோனா பாதிப்பு குறைய குறைய ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பொது போக்குவரத்து, கடைகள், கோயம்பேடு சந்தை, ஓட்டல்கள், தியேட்டர்கள் திறப்பு என அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் பள்ளி – கல்லூரிகள் திறப்பு, மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி போன்றவை இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதல்வர் ஊரடங்கு நீட்டிப்புடன் கூடிய தளர்வுகளை அறிவிக்கிறார். இதில் மெரினா கடற்கரை, பள்ளி கல்லூரிகள் திறப்பு, மத அரசியல் கூட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் ஊரடங்கு நீடிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.