ஜெயலலிதா பற்றிய படம், வெப் தொடருக்குத் தடை வேண்டும்! – தீபா வழக்கு
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படம் மற்றும் வெப் சரியலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்பாக படம், சீரியல் எடுக்கப்படுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் புதிதாக தாக்கல் செய்துள்ள மனுவில், உயர் நீதிமன்றம் தன்னை வாரிசு என்று அறிவித்தது தொடர்பான ஆவணங்களை இணைத்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் திருமணம் குறித்த சர்ச்சைகளும், அவரது சகோதரருக்கு போதை பழக்கம் இருந்ததாகவும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது அவரது புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். பொதுப் பணியில் ஈடுபட்டவர்களின் திருமணம், குடும்பம், வாரிசு, படிப்பு குறித்து வெளிப்படுத்துவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.