×

ஜெயலலிதா பற்றிய படம், வெப் தொடருக்குத் தடை வேண்டும்! – தீபா வழக்கு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படம் மற்றும் வெப் சரியலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்பாக படம், சீரியல் எடுக்கப்படுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “ஜெயலலிதாவின் வரலாற்றைத் தமிழில் தலைவி என்றும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் திரைப்பட இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்த்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதேபோல் ஜெயலலிதாவின் கதாபாத்தில் ரம்யா
 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படம் மற்றும் வெப் சரியலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்பாக படம், சீரியல் எடுக்கப்படுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “ஜெயலலிதாவின் வரலாற்றைத் தமிழில் தலைவி என்றும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் திரைப்பட இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்த்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதேபோல் ஜெயலலிதாவின் கதாபாத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற வெப் சீரியலை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாரிசாகிய என்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியல் எடுக்க தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் புதிதாக தாக்கல் செய்துள்ள மனுவில், உயர் நீதிமன்றம் தன்னை வாரிசு என்று அறிவித்தது தொடர்பான ஆவணங்களை இணைத்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் திருமணம் குறித்த சர்ச்சைகளும், அவரது சகோதரருக்கு போதை பழக்கம் இருந்ததாகவும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது அவரது புகழுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். பொதுப் பணியில் ஈடுபட்டவர்களின் திருமணம், குடும்பம், வாரிசு, படிப்பு குறித்து வெளிப்படுத்துவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெயலலிதா தன்னைப் பற்றிய விவரங்களை அதிகமாக வெளியிட விரும்பாதவர். இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது தவறானது. நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க அவரது மனைவி முத்துலட்சுமியிடம் அனுமதி பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.

எனவே, ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தயாராகும் படம், தொடருக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.