×

‘காணாமல் போன மகளுடன் வீடியோ கால்’ கண்கலங்கிய தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!

மதுரை அருகே காணாமல் போன மகளிடம் வீடியோ காலில் பேசிய தாய் ஆனந்தத்தில் கண் கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா(24) என்ற பெண்ணுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த திவ்யா, தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். திவ்யாவின் பெற்றோர் மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்ததால், திவ்யா வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். இது தொடர்பாக திவ்யாவின் பெற்றோர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் காவல்நிலையத்தில்
 

மதுரை அருகே காணாமல் போன மகளிடம் வீடியோ காலில் பேசிய தாய் ஆனந்தத்தில் கண் கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா(24) என்ற பெண்ணுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த திவ்யா, தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். திவ்யாவின் பெற்றோர் மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்ததால், திவ்யா வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். இது தொடர்பாக திவ்யாவின் பெற்றோர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் திவ்யாவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், இந்த வழக்கு சிறப்பு படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திவ்யாவின் செல்போன் எண்ணை வைத்து அவர் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர் படிப்பு படித்து வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, திவ்யாவின் தாயாரை அழைத்த போலீசார் அவருடன் வீடியோ காலில் பேச வைத்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின் மகளை பார்த்ததில், அந்த தாய்க்கு உண்டான சந்தோஷம் போலீசாரை நெகிழச் செய்திருக்கிறது. திவ்யாவை மீண்டும் அவரது குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.