×

ஆன்லைனில் சீட்டு விளையாடியதால் ஏற்பட்ட கடன்.. காணாமல் போன காவலர்; போலீஸ் ஸ்டேஷனில் மனைவி புகார்!

தமிழக அரசின் 11-வது பட்டாலியன் படைப்பிரிவு, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் இருக்கிறது. அதில் காவலராக பணியாற்றி வருபவர் சேரன் பாண்டியன்(26 ) . அங்கு பணியாற்றும் அனைவரும் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், சேரன் பாண்டியனும் புதிய காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு ஆன்லைனில் சீட்டு விளையாடும் பழக்கம் இருப்பதாகவும் அதனால் அவர் அதிகமாகக் கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், மனைவியின் நகையை
 

தமிழக அரசின் 11-வது பட்டாலியன் படைப்பிரிவு, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் இருக்கிறது. அதில் காவலராக பணியாற்றி வருபவர் சேரன் பாண்டியன்(26 ) . அங்கு பணியாற்றும் அனைவரும் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், சேரன் பாண்டியனும் புதிய காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு ஆன்லைனில் சீட்டு விளையாடும் பழக்கம் இருப்பதாகவும் அதனால் அவர் அதிகமாகக் கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், மனைவியின் நகையை வாங்கி கடனை அடைந்திருக்கிறார். அதன் பிறகு, கடந்த 20 ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற சேரன் பாண்டியன் வீடு திரும்பவில்லையாம். பணிக்கும் செல்லவில்லை என்று அவருடன் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். 5 நாட்களாக வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் அவரை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.