×

ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்!

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மதனந்தபுரம் கே.பழனிக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற சந்தேகத்தில், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் எம்.எல்.ஏ பழனியின் மனைவி விஜயாவிற்கும், மகள் திவ்யாவுக்கும்
 

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மதனந்தபுரம் கே.பழனிக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி இருக்குமோ என்ற சந்தேகத்தில், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் எம்.எல்.ஏ பழனியின் மனைவி விஜயாவிற்கும், மகள் திவ்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மேலும், அவரின் மாமியார் பாளையம்மாளுக்கும் மற்றும் கார் டிரைவர் டெய்லிஸ்க்கும் கொரோனாஉறுதியானது.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி முதல் எம்.எல்.ஏ பழனி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.