#BREAKING : அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் கொரோனா தொற்று
Jul 8, 2020, 09:09 IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.