×

“ஓடிப்போன அணில்கள் எல்லாம் மீண்டும் வந்து மின் தடை…” – அதிமுக கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று முற்றிலும் தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது ஒருநாள் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று தொடங் கி நடைபெற்றது. அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓடிப்போன அணில்கள் எல்லாம் மீண்டும்
 

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று முற்றிலும் தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது ஒருநாள் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று தொடங் கி நடைபெற்றது. அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓடிப்போன அணில்கள் எல்லாம் மீண்டும் வந்து மின் தடையை ஏற்படுத்துகிறது என்றார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும் போது, “தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தி குறைந்துவிட்டது. தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல.புதிய மின் உற்பத்தி நிலையங்களைக் கொண்டு கூடுதல் மின் உற்பத்தியை மேற்கொண்டதைப் போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றனர். 4.52 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த 9 மாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை . தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று முற்றிலும் தவறானது. மின் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 50% மின்சார பயன்பாடு அதிகரித்த போதும், கட்டணம் அதிகளவில் வசூலாகவில்லை. மின் துறையில் தமிழ்நாடு அரசை ஒவ்வொரு முறையும் தவறான தோற்றத்தில் சித்தரிக்க முயற்சித்து வருகின்றனர். மின் கட்டண கணக்கீட்டில் எங்கு குறை உள்ளது என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக யாரேனும் சுட்டிக்காட்டினால் அது உடனடியாக சரி செய்யப்படும். கடந்த ஆட்சியில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்பட்ட எண்ணிக்கை 15,000-க்கும் அதிகம்.” என்றார்.

செப்டம்பர் 21 வரை நடைபெற இருந்த தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 13ம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.