மதிப்பெண்ணை திருத்தினால் நடவடிக்கை! – பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டால் மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரக்கைவிடுத்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், காலாண்டு, அரையாண்டு, வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்க கணக்கீடு ஒன்றையும் வழங்கியது. ஆனால், சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணைத் திருத்துவதாக புகார் எழுந்தது.