×

கொரோனா சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செல்லூர் ராஜு குணமடைந்தார்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சாதாரண மக்கள் முதல்வர் அரசியல் பிரமுகர்கள் வரை பாரபட்சமின்றி பரவும் இந்த கொரோனா வைரஸ், பல அமைச்சர்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், நிலாபர் கபில் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சாதாரண மக்கள் முதல்வர் அரசியல் பிரமுகர்கள் வரை பாரபட்சமின்றி பரவும் இந்த கொரோனா வைரஸ், பல அமைச்சர்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், நிலாபர் கபில் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 8 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அமைச்சரின் மனைவி ஜெயந்திக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.