மேலும் ஒரு திமுக அமைச்சருக்கு கொரோனா!
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட பின், அவரவர் தங்கள் தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பத்மநாமபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அமைச்சர்கள் ஒவ்வொருவராக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதா மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா த்டுப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது.