×

கணவனை இழந்த பெண்களுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

சட்டப்பேரவையில் கால்நடைத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், “கால்நடைகளின் நலன்களைப் பேணவும் தரமான சிகிச்சை வழங்கவும் ரூ.7.76 கோடி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும். தொலைதூர கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு முதலுதவி, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் ஆகிய சேவைகளை வழங்க ரூ.2 கோடி மதிப்பில் 50புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை அறிய ரூ.3.50 கோடியில் 25 கிளை
 

சட்டப்பேரவையில் கால்நடைத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், “கால்நடைகளின் நலன்களைப் பேணவும் தரமான சிகிச்சை வழங்கவும் ரூ.7.76 கோடி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும். தொலைதூர கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு முதலுதவி, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் ஆகிய சேவைகளை வழங்க ரூ.2 கோடி மதிப்பில் 50புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.

சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை அறிய ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும். ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 30,800 பெண்களுக்கு ரூ.75.63 கோடி ஒதுக்கீட்டில் தலா 5 செம்மறி, வெள்ளாடுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 85 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு ரூ.54 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். அரியலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகளுக்கு ரூ.3.46 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

மாநிலத்தில் பசுந்தீவன இருப்பை அதிகரிக்க ரூ.4.82 லட்சம் மதிப்பில் 16 தீவன வங்கிகள் நிறுவப்படும். திருநெல்வேலி மாவட்டம்,அபிகேசம்பட்டி கால்நடைப்பண்ணையில் ரூ.9.42 கோடியில் நாட்டுக் கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் கோழிக்குஞ்சுப் பொரிப்பகம் நிறுவப்படும். செல்லப்பிராணிகளுக்கான பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்னை நந்தனத்தில் ரூ.7.99 கோடியில் நிறுவப்படும். தமிழக வடமேற்கு மண்டலங்களில் நிலையான கால்நடை உற்பத்திக்காக தீவன விதை உற்பத்திப் பிரிவு ரூ.1.49 கோடியில் நிறுவப்படும்” என்றார்.