×

எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை…மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும் இல்லை- அமைச்சர் அன்பழகன்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 2,141பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,017ஆக அதிகரித்துள்ளது. சமீப காலமாக அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதித்து வரும் நிலையில், நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று முன்தினம் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனையில் கலந்து கொண்ட இவருக்கு கொரோனா
 

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 2,141பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,017ஆக அதிகரித்துள்ளது. சமீப காலமாக அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதித்து வரும் நிலையில், நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

நேற்று முன்தினம் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனையில் கலந்து கொண்ட இவருக்கு கொரோனா தொற்று பரவியதாகவும், அதன் காரணமாக அவர் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனக்கு கொரோனா இல்லை என்றும் தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை, தனிமை படுத்தப்படவும் இல்லை என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும், அதுவும் தற்போது சரியாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார். நேற்று முன்தினமும் இதே போல திமுக கலை இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா இருப்பதாக தவறான தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.