எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.சி.சந்திரன் கொரோனாவால் உயிரிழப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.சி.சந்திரன்(வயது75) கொரோவால் இன்று(11.9.2020) உயிரிழந்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் புதல்வர் எம்.சி.சந்திரன். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த திங்கட்கிழமை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் நேற்று உறவினர்களிடம் தெரிவித்த நிலையில், சற்று முன் மரணமடைந்து விட்டார். இன்று காலை திடீரென்று உடல் நிலை மோசமடைந்திருக்கிறது. உடனே, வென்ட்டிலேட்டர் பொருத்த ஏற்பாடு செய்வதற்குள் உயிர் பிரிந்து விட்டதாக
Sep 11, 2020, 14:26 IST
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.சி.சந்திரன்(வயது75) கொரோவால் இன்று(11.9.2020) உயிரிழந்தார்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் புதல்வர் எம்.சி.சந்திரன். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த திங்கட்கிழமை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் நேற்று உறவினர்களிடம் தெரிவித்த நிலையில், சற்று முன் மரணமடைந்து விட்டார்.
இன்று காலை திடீரென்று உடல் நிலை மோசமடைந்திருக்கிறது. உடனே, வென்ட்டிலேட்டர் பொருத்த ஏற்பாடு செய்வதற்குள் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.