×

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம்

கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதால் அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுந்தது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவ குழு
 

கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் உடல்நிலை நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதால் அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுந்தது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தந்தையிடன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது மகன் சரண் தெரிவித்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.