×

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியமுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுந்தது. கடந்தவாரங்களில் அவரது உடல்நிலை
 

கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியமுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. அவருக்கு லேசான அறிகுறி இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே தன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நலத்துடன் இருப்பதாகவும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் எஸ்.பிபி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர் உடல்நலம் எப்படி இருக்கிறது என கேள்வி எழுந்தது. கடந்தவாரங்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் எஸ்.பி.பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர் மயக்க நிலையிலிருந்து மீண்டு விழித்துக்கொண்டுள்ளார். பிசியோதெரபி சிகிச்சைக்கு எஸ்.பி.பியின் உடல் முழு ஒத்துழைப்பு அலிக்கிறது. இருப்பினும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.