×

தன் கையை தானே வெட்டிகொண்ட நபரால் தேனியில் பரபரப்பு

தேனியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மனநிலை பாதித்த நிலையில் தன் கையை தானே வெட்டி துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று காமயகவுண்டன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக , குடும்பத்தை பிரிந்து தனிமையில் இருந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக
 

தேனியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மனநிலை பாதித்த நிலையில் தன் கையை தானே வெட்டி துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று காமயகவுண்டன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக , குடும்பத்தை பிரிந்து தனிமையில் இருந்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மன நிலை பாதிக்கப்பட்டதுபோல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காமயகவுண்டன்பட்டியில் இருந்து கம்பம் வந்த வெங்கடேசன், பேருந்து நிலையம் அருகே இருந்த கறிக்கடை ஒன்றில் நுழைந்து, திடீரென கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது கையை தானே வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நான்கைந்து முறை வெட்டி ஒரு கையை துண்டாக்கியதுடன், மற்றொரு கையை யாராவது வெட்டுங்கள் என கூறியபடியே கடையை விட்டு வெளியேறி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலிசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.