×

ரேஷனில் விரைவில் மாஸ்க் வழங்கப்படும் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஊரடங்கால் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பிரபலங்கள் உட்பட பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். மக்கள் வீட்டிலேயே இருப்பதால், கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக தமிழ்நாடு
 

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஊரடங்கால் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பிரபலங்கள் உட்பட பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். மக்கள் வீட்டிலேயே இருப்பதால், கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கைகளில் கறுப்புக்கொடியுடன் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அமைச்சர் உதயகுமார், மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டத்தில் இறங்கியுள்ளது. மின்கட்டணம் குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்த நிலையில் தேவையின்றி திமுக போராட்டம் நடத்துகிறது. விரைவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாஸ்க் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.