×

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் ‘இதுவும்’ சேர்ப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் வெளியில் தேவையின்றி ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல இ பதிவு முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இ-பதிவு’ செய்வதற்கு தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘கேப்ட்சா’ என்ற எண்ணை பதிவிட்டு உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபியை பதிவிட வேண்டும். பின்னர் உங்கள் முன் தோன்றும் விவர பதிவேட்டில்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் வெளியில் தேவையின்றி ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல இ பதிவு முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இ-பதிவு’ செய்வதற்கு தமிழக அரசின் http://eregister.tnega.org என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும்.

பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘கேப்ட்சா’ என்ற எண்ணை பதிவிட்டு உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபியை பதிவிட வேண்டும். பின்னர் உங்கள் முன் தோன்றும் விவர பதிவேட்டில் பயண தேதி, பயணம் செய்பவர்களின் பெயர், வாகன எண், எங்கிருந்து எங்கே பயணம், எதற்காக பயணம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். அத்துடன் நீங்கள் பயணம் செய்வதற்காக ஆதார், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய 5 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒருவேளை திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றால், திருமண அழைப்பிதழை பதிவேற்றம் செய்யுங்கள்.ஆனால் திருமணம் என்ற காரணம் கூறி பலரும் வெளியில் சுற்றி திரிவதால் இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணம் என்ற காரணம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயணம் செய்வதற்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.