×

“என்னை தவிர இன்னும் எத்தனை பேரோட ….”கொதித்த ஒரு காதலன் -அடுத்து நடந்த கொடுமை 

ஒரு பெண்ணும் அவரது கணவரும் அந்த பெண்ணின் காதலனால் அடித்துக் கொல்லப்பட்டனர் . உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் வசிக்கும் சமீர் என்ற வாலிபர் ஜுபைதா என்ற பெண்ணை காதலித்தார் .ஆனால் அந்த பெண் அவரை விட்டு பிரிந்து ஆபாத் என்ற வாலிபரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் .ஆனால் அதன் பிறகும் அந்த பெண்ணுக்கும் சமீருக்கும் கள்ள உறவு இருந்து வந்துள்ளது .அதனால் சமீர் அடிக்கடி
 

ஒரு பெண்ணும் அவரது கணவரும் அந்த பெண்ணின் காதலனால் அடித்துக் கொல்லப்பட்டனர் .

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் வசிக்கும் சமீர் என்ற வாலிபர்  ஜுபைதா என்ற பெண்ணை காதலித்தார் .ஆனால் அந்த பெண் அவரை விட்டு பிரிந்து ஆபாத் என்ற வாலிபரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் .ஆனால் அதன் பிறகும் அந்த பெண்ணுக்கும் சமீருக்கும் கள்ள உறவு இருந்து வந்துள்ளது .அதனால் சமீர் அடிக்கடி தன்னுடைய காதலி வீட்டிற்கு வந்து போனார் .அப்போதெல்லாம் அந்த ஜூபைதா அவரை அக்கம்பக்கத்தினரிடம் தன்னுடைய சகோதரர் என்று அறிமுகம் செய்தார் .

இந்த கள்ள உறவு விவகாரம் அந்த பெண்ணின் கணவர் ஆபாத்துக்கும் தெரியும் .அவர் சமீரிடம் பணம் வாங்குவதற்காக இப்படி தெரிந்தே அவரோடு பழக விட்டார் .பின்னர் சமீருக்கு அவரின் காதலி தன்னை தவிர மேலும் பலரோடு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார் .அதனால் கடந்த வாரம் சமீர் அந்த பெண்ணின் வீட்டில் வந்து தகறாரு  செய்தார் .அதன் பிறகு அவரின் குழந்தைகள் முன்பே அந்த ஜூபைதா மற்றும் ஆபாத் இருவரையும் கொலை செய்து விட்டு ஓடி விட்டார் .குழந்தைகள் முன்பு நடந்த இந்த இரட்டை கொலை அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .போலீசார் அந்த சமீர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்