×

ஓடிப்போன மனைவி -தேடி போன கணவர் -அடுத்து எதை வெட்டி தள்ளினார் தெரியுமா ?

தன்னை விட்டு ஓடிப்போன மனைவியை கணவர் தேடி சென்று அவரின் மூக்கை வெட்டி தள்ளிய கொடுமை நடந்துள்ளது . பாகிஸ்தானின் குஜர்கான் பகுதியில் குஜராத்தில் வசிக்கும் தாஜுதீன் என்பவர் மர்யம் என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், மர்யம் தன் கணவர் தாஜ்தினை விட்டு பிரிந்து ஃபரித், என்ற நபரை எட்டு மாதங்களுக்கு முன்பு மறுமணம் செய்து கொண்டார் .ஆனால் தாஜுதீன் இந்த திருமணத்தை ஏற்கவில்லை .அதனால் அவர் தன்னுடைய மனைவி
 

தன்னை விட்டு ஓடிப்போன மனைவியை கணவர் தேடி சென்று அவரின் மூக்கை வெட்டி தள்ளிய கொடுமை நடந்துள்ளது .


பாகிஸ்தானின் குஜர்கான் பகுதியில் குஜராத்தில் வசிக்கும் தாஜுதீன் என்பவர் மர்யம் என்ற பெண்ணை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், மர்யம் தன் கணவர் தாஜ்தினை விட்டு பிரிந்து ஃபரித், என்ற நபரை எட்டு மாதங்களுக்கு முன்பு மறுமணம் செய்து கொண்டார் .ஆனால் தாஜுதீன் இந்த திருமணத்தை ஏற்கவில்லை .அதனால் அவர் தன்னுடைய மனைவி மர்யத்தை பழிவாங்க முடிவு செய்தார்.
அதனால் அவரின் உறவினர்களை அழைத்து கொண்டு மர்யத்தை அங்குள்ள குஜர்கானில் உள்ள டால்மியாவுக்கு அழைத்துச் சென்றார்,.பின்னர் அவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்னின் கை, கால்களை கட்டி போட்டார் .பிறகு அவரின் மூக்கை வெட்டி தள்ளினார் .அடுத்து அவரின் காலை வெட்ட முயன்ற போது அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்று போலீசில் புகார் கொடுத்தார் .
பிறகு மர்யாமின் இரண்டாவது கணவர் இந்த தாக்குதல் பற்றி அறிந்ததும், அவர் மீர்பூருக்கு விரைந்து சென்று அவரை மீட்க முயன்றார். இருப்பினும், அவர் திருமண சான்றிதழை சமர்ப்பிக்க முடியாததால் ஃபரித்துடன் அவரை போலீசார் அனுப்பவில்லை . பின்னர் அந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், அங்கு அவர் குணமடைந்து வருகிறார்.