×

“உறவினரை பார்க்க வர்றேன்னு பெண்ணோடு உறவு கொண்டு “-அடுத்து வாலிபருக்கு நேர்ந்த நிலை

உறவினர் வீட்டுக்கருகே வசித்த பெண்ணை பாலியல் கொடுமை செய்த வாலிபர் சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் . உத்தரபிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற வாலிபர் அவரின் மோடாஹா பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார் .அப்போது அந்த வீட்டுக்கருகே வசித்து வந்த ஒரு 16 வயது பெண்ணோடு அடிக்கடி பேசி வந்தார் .பின்னர் அவரை தனிமையில் சந்திக்க விரும்புவதாக கூறி ஒரு இடத்திற்கு வரவைத்து அவரை
 


உறவினர் வீட்டுக்கருகே வசித்த பெண்ணை பாலியல் கொடுமை செய்த வாலிபர் சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .


உத்தரபிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற வாலிபர் அவரின் மோடாஹா பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார் .அப்போது அந்த வீட்டுக்கருகே வசித்து வந்த ஒரு 16 வயது பெண்ணோடு அடிக்கடி பேசி வந்தார் .பின்னர் அவரை தனிமையில் சந்திக்க விரும்புவதாக கூறி ஒரு இடத்திற்கு வரவைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தார் .
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த விஷயத்தை அவரின் பெற்றோரிடம் கூறினார் .உடனே அவரின் பெற்றோர்கள் அந்த வாலிபர் மீது மோடாஹா காவல் நிலையத்தில் புகார் கூறினர் .போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவர் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர் .
இதனால் அந்த வாலிபர் இரண்டு நாட்கள் அந்த ஜெயிலிலேயே கழித்தார் .அதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் அந்த சிறையிலேயே தன்னுடைய சட்டையின் காலரை எடுத்து தூக்கில் தொங்கினார் .உடனே மறுநாள் காலையில் அதை பார்த்த அந்த போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபில்கள் அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டி சென்றார்கள் .அங்கு அவரை சோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார் .பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது .இந்த சம்பவம் தொடர்பாக அப்போது பணியிலிருந்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .