தமிழகத்தில் அதிதீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம்மிக்க கொரோன வைரஸ் பிரிவு! – அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் அதிதீவிர வகை கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கடந்த ஜனவரி 1ம் தேதி சீனாவில் வூகானில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரவ வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா 2 லட்சம் பேருக்கு பரவலாம் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு தடுப்பூசி இல்லை. நமக்கு வந்தால் அந்த வைரசை அழிக்க மருந்து இல்லை. நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் கொரோனா வராமல் தடுக்க முடியும். கொரோனா வந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பு வராமல் இருக்கவே சிகிச்சை அளிக்கப்படுகின்றன. எனவே, மற்றவர்களை நம்புவதை விட நம்மை நாமே காத்துக்கொள்வது பாதுகாப்பானது.