×

மதுரை: தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரை கீரைத்துறையில் தி.மு.க பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரைத்துறையில் மதுரை கிழக்கு மண்டல மாநகராட்சி தலைவராக இருந்த தி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி என்பவர் வீடு உள்ளது. கொலை மற்றும் ஆயுதம் கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்தவர். இவருடைய சகோதரியின் கணவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த துக்க நிகழ்வில் பங்கேற்க குருசாமிக்கு பரோல் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு பைக்கில்
 

மதுரை கீரைத்துறையில் தி.மு.க பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கீரைத்துறையில் மதுரை கிழக்கு மண்டல மாநகராட்சி தலைவராக இருந்த தி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி என்பவர் வீடு உள்ளது. கொலை மற்றும் ஆயுதம் கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்தவர். இவருடைய சகோதரியின் கணவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த துக்க நிகழ்வில் பங்கேற்க குருசாமிக்கு பரோல் வழங்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் நான்கு பேர், கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அவருடைய வீட்டுக் கதவை தாக்கியுள்ளனர். பின்னர் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை

 

வீசினர். பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொருக்கி தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது.