×

ஆபாச போஸ்டர்கள்: ‘இரண்டாம் குத்து’ பட குழுவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஆபாசமான போஸ்டர்கள் தொடர்பாக, இரண்டாம் குத்து படக்குழுவிற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார், இயத்தில் உருவாகியிருக்கும் படம் இரண்டாம் குத்து. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து வெளியான இப்படத்தின் போஸ்டர்களும், ஆபாசத்தின் உச்சக் கட்டத்தில் அமைந்திருந்தது. இதற்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் நீதிமன்றம்
 

ஆபாசமான போஸ்டர்கள் தொடர்பாக, இரண்டாம் குத்து படக்குழுவிற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார், இயத்தில் உருவாகியிருக்கும் படம் இரண்டாம் குத்து. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து வெளியான இப்படத்தின் போஸ்டர்களும், ஆபாசத்தின் உச்சக் கட்டத்தில் அமைந்திருந்தது. இதற்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

இந்த நிலையில், இரண்டாம் குத்து படம் தொடர்பான போஸ்டர்களை நீக்கக்கோரி பெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு தணிக்கைக் குழு ஏதும் கிடையாதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிவியில் ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர்கள் பல குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகின்றன என்று கருத்து தெரிவித்தனர். மேலும், நெடுந்தொடர்களில் தவறான உறவுகள் குறித்தே பெரும்பாலான கதைகள் அமைகிறது என்றும் கூறினர்.