×

10 ஆம் வகுப்பு படிக்கும் மகளை காதலிக்குமாறு தொந்தரவு செய்த இளைஞரை கொலை செய்த தந்தை

சிதம்பரத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை காதல் செய்யகோரி வீட்டிற்கே வந்து தொல்லை கொடுத்த வாலிபர் கை கால் கட்டப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(21). இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது 10 ஆம் வகுப்பு படிக்கும் மகளிடம் ஒரு ஆண்டுக்கு முன்பு பேச தொடங்கியுள்ளார். அதன் பின் அன்பழகன் நடவடிக்கை சரியில்லததால் அந்த சிறுமி பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால்
 

சிதம்பரத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை காதல் செய்யகோரி வீட்டிற்கே வந்து தொல்லை கொடுத்த வாலிபர் கை கால் கட்டப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(21). இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது 10 ஆம் வகுப்பு படிக்கும் மகளிடம் ஒரு ஆண்டுக்கு முன்பு பேச தொடங்கியுள்ளார். அதன் பின் அன்பழகன் நடவடிக்கை சரியில்லததால் அந்த சிறுமி பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த சிறுமியை அடிக்கடி மிரட்டி தன்னை காதலிக்குமாறு அன்பழகன் தொல்லை செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பாபுவின் வீட்டிற்கே சென்று சிறுமியை தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளார். இதனால் பாபுவின் குடும்பதினர் அன்பழகனை கை கால் கட்டி வெட்டி கொலை செய்துயுள்ளனர். கொலை செய்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அன்பழகனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பாபு அவரது மனைவி சத்தியா, மகன், மகள் ஆகிய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.