×

பறிமுதல் செய்யப்பட்ட லாரியை ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் ஓட்டிச்சென்றபோது விபத்து… ஒருவர் பலி

புதுக்கோட்டை அருகே போலீஸ் கைப்பற்றிய மணல் லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரையூர் அருகே உள்ள கீழதானியம் ராமலிங்காபுரத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக புகார் வந்தவண்ணம் இருந்தது. இதனால் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல் மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு டிப்பர் லாரியை பிடித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர் சரவணன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அந்த
 

புதுக்கோட்டை அருகே போலீஸ் கைப்பற்றிய மணல் லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரையூர் அருகே உள்ள கீழதானியம் ராமலிங்காபுரத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக புகார் வந்தவண்ணம் இருந்தது. இதனால் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல் மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு டிப்பர் லாரியை பிடித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர் சரவணன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அந்த லாரியை எடுத்துச் செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் லாரி மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த அழகு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.