ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!
ரூ.16 கோடியைத் தாண்டிய சென்னை போலீசின் ஊரடங்கு மீறல் வசூல்!
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கை மீறியது தொடர்பாக இதுவரை ரூ.16 கோடி அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நாடு முழுக்க கடந்த மார்ச் 24ம் தேதி இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாட்டின் பல பகுதிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் தளர்வு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு வந்தது.
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை ரூ.16.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏழு லட்சத்து எழுபதாயிரம் பேர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். 5,78,854 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.