×

#BREAKING: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அச்சமயம் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிப்பு சற்றும் குறையாததால் அடுத்தடுத்த வாரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு. அதன் விளைவாக, கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. முழு ஊரடங்கு பலனளிக்க தொடங்கியிருப்பதாக தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவைப்பட்டால் ஊரடங்கு நீடிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அச்சமயம் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிப்பு சற்றும் குறையாததால் அடுத்தடுத்த வாரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு.

அதன் விளைவாக, கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. முழு ஊரடங்கு பலனளிக்க தொடங்கியிருப்பதாக தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவைப்பட்டால் ஊரடங்கு நீடிக்கப்படுமென தெரிவித்திருந்தார். தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 7ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில், பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் தளர்வுகள் அளிக்குமாறு அதிகாரிகள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30% ஊழியர்களுடன் திங்கட்கிழமை முதல் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.