×

முதல்வர் தயார் மறைவு; தலைவர்கள் இரங்கல்!

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் தாயாரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர்
 

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முதல்வர் தாயாரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் திரு.பழனிசாமி அவர்களின் தாயார் திருமதி.தவசாயி அம்மாள் மறைவெய்திய செய்தியால் மனவேதனைக்கு உள்ளானேன். அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் பழனிசாமி குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் ஆறுதல்களும்!” என பதிவிட்டுள்ளார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில், ” #மறைவு: மாண்புமிகு தமிழக முதல்வரின் அருமை தாயார் #தவசாயி_அம்மாள்(93) காலமானதையறிந்து வேதனைப் படுகிறேன். மறைந்த அன்னைக்கு அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரை இழந்து துயருரும் முதல்வர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில், ” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன்.மேலும் அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல்வர் தாயாரின் மறைவையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓபிஎஸ், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, ஜி.கே .வாசன், பாஜக எல்.முருகன்,வைகோ, நாராயணசாமி, துரைமுருகன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.