×

நில அபகரிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்திடம் சிக்கிய அழகிரி!

மதுரை திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரிக்காக இப்பகுதியில் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக மு.க. அழகிரி உள்ளிட்ட பலர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அழகிரி மீது
 

மதுரை திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரிக்காக இப்பகுதியில் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக மு.க. அழகிரி உள்ளிட்ட பலர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அழகிரி மீது பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு குற்றப்பிரிவுகள் பொருந்தாது என நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.