×

கணவனுடன் தகராறு: கைக்குழந்தையுடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வசித்து வரும் தம்பதி பொன்முருகன் (24) – குருதேவி (20). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில், 3 மாத கைகுழந்தை ஒன்று இருக்கிறது. குடும்பத் தகராறால் பொன்முருகனுக்கும் குருதேவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கணவனுடனான சண்டையால் மனமுடைந்திருந்த குருதேவி நேற்று தனது குழந்தையுடன் தீக்குளித்துள்ளார். படுகாயம் அடைந்த குருதேவியும்குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது வீட்டில்
 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வசித்து வரும் தம்பதி பொன்முருகன் (24) – குருதேவி (20). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில், 3 மாத கைகுழந்தை ஒன்று இருக்கிறது. குடும்பத் தகராறால் பொன்முருகனுக்கும் குருதேவிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கணவனுடனான சண்டையால் மனமுடைந்திருந்த குருதேவி நேற்று தனது குழந்தையுடன் தீக்குளித்துள்ளார். படுகாயம் அடைந்த குருதேவியும்குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால், குருதேவி தற்கொலைக்கு முயன்றது யாருக்கும் தெரிய வரவில்லை என கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த கமுதி போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை வருடத்தில் இந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.