×

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் திடீர் அனுமதி !

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய் பிரச்சனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான படங்களுக்குப் பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்து மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக.மகா பெரியவரையும் ,முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன்” என்று பதிவிட்டு கவிஞர் வைரமுத்துவை
 

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதய நோய் பிரச்சனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான படங்களுக்குப் பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்து மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

https://twitter.com/seenuramasamy/status/1339078184738803713

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக.மகா பெரியவரையும் ,முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன்” என்று பதிவிட்டு கவிஞர் வைரமுத்துவை டேக் செய்துள்ளார்.