×

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரானார் கமல் ஹாசன் ; புதிய நிர்வாகிகள் நியமனம்!!

மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். இன்று இணைய வழி கலந்துரையாடலில் கமல் ஹாசன் உரையாடினார். அப்போது பேசிய அவர், கட்சி உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தங்களது உடல் நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியம். மண் ,மொழி, மக்கள் காக்க
 

மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். இன்று இணைய வழி கலந்துரையாடலில் கமல் ஹாசன் உரையாடினார். அப்போது பேசிய அவர், கட்சி உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தங்களது உடல் நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

மண் ,மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தும், நமது கொள்கைகளை செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், சில புதிய நியமனங்களை செய்திருக்கிறேன். அதன்படி கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாக கட்சியின் பொதுச்செயலாளர் என்னும் பொறுப்பினையும் ஏற்று பணியாற்றி இருக்கிறேன்.

புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், 2 துணைத் தலைவர்கள் ,மூன்று மாநில செயலாளர்கள் நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . மேலும் சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் புதிய மாநில செயலாளர்கள் ஏற்கனவே நமது கட்சியில் வேட்பாளர்களாக கடந்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டவர்கள் தானும் அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

இளங்கோ – சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர் மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் அநீதிகளுக்கு எதிராக சட்ட போராட்டங்கள் தொடர்ந்த காரணத்தினால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறைக்கு சென்றவர்.

செந்தில் ஆறுமுகம் – தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற இலட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர்

சரத்பாபு – தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவோராக திகழ்பவர். புட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.

புதிய நியமனங்கள்

பழ.கருப்பையா – அரசியல் ஆலோசகர்

பொன்ராஜ் வெள்ளைச்சாமி -அரசியல் ஆலோசகர்

ஏ.ஜி. மௌரியா துணைத்தலைவர் – கட்டமைப்பு

தங்கவேலு – துணைத்தலைவர் களப்பணி மற்றும் செயல்படுத்துதல்

செந்தில் ஆறுமுகம் – மாநில செயலாளர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தித் தொடர்பு

இளங்கோ – மாநில செயலாளர் கட்டமைப்பு

சரத்பாபு -மாநில செயலாளர் தலைமை நிலையம்

ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாக குழு உறுப்பினர்

நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்