×

காடுவெட்டி மகனுக்கு அரிவாள் வெட்டு: காடுவெட்டி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிப்பு!

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது காடுவெட்டி குருவின் ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை, காடுவெட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், பாமக பிரமுகருமான சின்னபிள்ளை, அவரது சகோதரர் காமராஜ் ஆகியோர் பிடித்து வைத்துள்ளனர். இதனால் பிடித்து வைத்துள்ள பைக்கை மீட்டு செல்ல, காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது காமராஜ் மகன் சதீஷுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
 

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது காடுவெட்டி குருவின் ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை, காடுவெட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், பாமக பிரமுகருமான சின்னபிள்ளை, அவரது சகோதரர் காமராஜ் ஆகியோர் பிடித்து வைத்துள்ளனர்.

இதனால் பிடித்து வைத்துள்ள பைக்கை மீட்டு செல்ல, காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது காமராஜ் மகன் சதீஷுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மூவரும் அரிவாளால் தக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காயமடைந்த மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

குருவின் தங்கை செந்தாமரை, இதற்குக் காரணம் பா.ம.க.தான். நாங்கள் ஏற்கனவே இதனைப் பேட்டியில் சொல்லியுள்ளோம். போலீசில் தகுந்த பாதுகாப்பும் கேட்டோம். ஆனால் கொடுக்காததால்தான் இந்தப் பிரச்சனை வந்துள்ளது என்றார்.

இந்த சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்காக காடுவெட்டி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.