ஜெயராஜ், ஃபெனிக்சுக்கு நீதி வேண்டும்! – கனிமொழி மாஸ்க்கால் பரபரப்பு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மாஸ்க்கை கனிமொழி எம்.பி அணிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயராஜ், ஃபெனிக்ஸ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மாஸ்கை கனிமொழி அணிந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா பீதி காரணமாக கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறி வரும் நிலையில், மாஸ்கில், “ஜஸ்டிஸ் ஃபார் ஜெயராஜ் அன்ட் ஃபெனிக்ஸ்” என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட மாஸ்கை கனிமொழி அணிந்திருந்தார். மேலும், தூத்துக்குடியில் தி.மு.க தொண்டர்கள், பொது மக்களுக்கும் இந்த மாஸ்கை கனிமொழி வழங்கினார்.