அமைச்சர்களை வரவேற்க வைக்கப்பட்ட வெடியால் தீப்பற்றி எரிந்த ஜெயலலிதா சுவரொட்டி
திருச்சி கருமண்டபம் பகுதியில் அ.தி.மு.க பகுதி செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வரும் போது அமைச்சர்களை வரவேற்க அ.தி.மு.க வினர் பட்டாசுகள் வெடித்தனர்.அப்போது அந்த பட்டாசின் நெருப்பு பட்டதில் அந்த பகுதியில் ஒட்டப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முகம் இருந்த சுவரொட்டி பற்றி எரிந்தது.
அதை அ.தி.மு.க வினர் கண்டு கொள்ளாமல் சென்றனர்.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த தீயை அணைத்தனர். மின்சார வயர்கள் அங்கு இருந்த நிலையில் தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.ஜெயலலிதா போஸ்டர் எரிந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது