×

மறைந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று பிறந்த நாள்… சோகத்தில் திமுகவினர்!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் 62 வயதான அன்பழகன். அன்பழகன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் இருந்த இவர் திமுக கட்சி பணியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். அன்பழகன் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கட்சி பணிகளை திறம்பட செய்து
 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் 62 வயதான அன்பழகன். அன்பழகன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் இருந்த இவர் திமுக கட்சி பணியில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

அன்பழகன் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கட்சி பணிகளை திறம்பட செய்து முடித்து தலைமையிடம் பாராட்டு தருவதில் வல்லவர் கருத்துக்களை துணிச்சலாக கட்சித் தலைமையிடம் தெரிவிக்க குணம் கொண்ட இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணிக்கு காலமானார். இவரது மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதிசடங்கு கண்ணமாபேட்டை சுடுகாட்டில் நடைபெறவுள்ளது. அன்பழகன் கொரோனாவால் இறந்த காரணத்தால் அவரின் இறுதிசடங்கில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

கொரோனாவால் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பலியானது இதுவே முதன்முறை. மேலும் மறைந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று பிறந்த நாள். பிறந்த நாள் அன்றே இறந்தார் என்ற நிலையை அடைந்துள்ளார் அன்பழகன்.