×

கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி ? கமல் ஹாசன் பதில்!

தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று நடிகரும் மக்கள் நீதி மய்யதலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் திருச்சியில் நடத்த பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது. அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.300 , ஆண் குழந்தை பிறந்தால் ரூ.500 லஞ்சம் பெறுகின்றனர். தமிழகத்தில் அனைத்து
 

தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று நடிகரும் மக்கள் நீதி மய்யதலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் திருச்சியில் நடத்த பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது. அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.300 , ஆண் குழந்தை பிறந்தால் ரூ.500 லஞ்சம் பெறுகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது. குழந்தை பிறப்பு முதல் குடும்ப அட்டை, பட்டா ,சொத்துவரி, மின் இணைப்பு வரை லஞ்சம்” என்றார்.

கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி என்ற கேள்விக்கு, 40 ஆண்டுகால நண்பர் ரஜினிக்கு உடல் நலம் தான் முக்கியம் . உடல் நலம் சரியான பின் ரஜினி தனது பணிகளை தொடங்குவார். ரஜினிகாந்தின் உடல் நலத்தின் அடிப்படையில் யுகமான தகவல்களை வெளியிட கூடாது. ஜனவரியில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். நாங்கள் 3வது அணியாக மாறிவிட்டோம் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது என்றார்.