சென்னையில் அதிகரிக்கும் கார்பன் மாசு… 2015 வெள்ளத்தை விட பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு! – சென்னை ஐஐடி எச்சரிக்கை
சென்னையில் அதிகரித்துவரும் கார்பன் மாசு காரணமாக பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்து வருகிறது. இது சென்னையில் மிகப்பெரிய மழை, வெள்ள பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தரை வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்படும்போது மழை அளவு அதிகரிக்கிறது. சென்னையில் தொடர்ந்து கார்பன் மாசு அதிகரித்துக் கொண்டே சென்றால் 2015ம் ஆண்டில் ஏற்பட்டதைக் காட்டிலும் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.