×

நான் குணமடைந்துவிட்டேன்! – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தன்னுடைய உடல்நலம் பற்றி வெளியான தகவல் தவறானது என்றும், தான் குணமடைந்துவிட்டதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாத் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பு உள்ளதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை கே.பி.அன்பழகன் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,
 

தன்னுடைய உடல்நலம் பற்றி வெளியான தகவல் தவறானது என்றும், தான் குணமடைந்துவிட்டதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாத் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பு உள்ளதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது.


இந்த தகவலை கே.பி.அன்பழகன் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் நலமுடன் உள்ளேன். டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன். வருகிற 15ம் தேதி பொறியியல் கலந்தாய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். என் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுவதை நம்ப வேண்டாம்” என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.