நான் குணமடைந்துவிட்டேன்! – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
தன்னுடைய உடல்நலம் பற்றி வெளியான தகவல் தவறானது என்றும், தான் குணமடைந்துவிட்டதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கே.பி.அன்பழகன் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் நலமுடன் உள்ளேன். டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன். வருகிற 15ம் தேதி பொறியியல் கலந்தாய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன். என் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படுவதை நம்ப வேண்டாம்” என்று கூறியதாக தெரிவித்துள்ளனர்.