×

இனி பிரெட்,முட்டையும் வீடு தேடி வரும் ; அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி!

காய்கறி விற்பனை குறித்து இணையத்தில் அறியலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், சென்னையில் காய்கறி விற்பனையாளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்கறி, பழங்கள் விற்பனை குறித்த விவரங்கள் இதன் மூலம் அறியலாம்.சென்னையில் காய்கறி விநியோகம் செய்வோரின் செல்போன் எண், பெயர், விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் ஆகியவற்றையும்
 

காய்கறி விற்பனை குறித்து இணையத்தில் அறியலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், சென்னையில் காய்கறி விற்பனையாளர்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்கறி, பழங்கள் விற்பனை குறித்த விவரங்கள் இதன் மூலம் அறியலாம்.சென்னையில் காய்கறி விநியோகம் செய்வோரின் செல்போன் எண், பெயர், விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும். மக்களின் தேவைகள் கருதி வியாபாரிகள் முட்டை, பிரெட் போன்றவற்றையும் கொண்டு செல்ல வேண்டும். அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட மாநகராட்சி சார்பில் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.